Thursday, April 15, 2010

விண்மீன்கள் இடையே
மேனிபோல் செம்பட்டுடுத்தி
புன்சிரிப்புபோல் நகையணிந்து
குளிர்நிலவாய் நீ இருக்க
நின்னருகே
தூய கதிரவனே
உன்னவராய் அமர
என் நேசதிற்குள்
காதல் மலர்வதை
கண்டேனடி
எவ்வாறு
வான்மழை கண்ட
வண்ண மயில்போல்
மகிழ்ந்து ஆடுமோ
அதுபோல்
மகிழ்ந்தேனடி தோழி.

No comments:

Post a Comment