Thursday, April 15, 2010

நட்பின் சீர்வருசை

நமக்குள் ஓர் பந்தம்
ஓர் இரவில் நம் அறிமுகம்
இருநாட்களில் உண்டான அன்பு
முக்காலமும் உன் நினைவு
நான் மறையிலும் உன் பெயர்
ஐந்து திங்களில் நீயின்றி நானில்லை
அறுவடை கதிர்போல் உன் ஞானம்
ஏழாம் சுவையாய் உன் ஆறுதல்
எட்டிபார்க்கும் நம் காதல்
ஒன்பதுமுறை மட்டுமே நமக்குள் மோதல்
பத்து பொருத்தமாய் நம் நேசம்
இதுவே நம்
நட்பின் சீர்வருசை.

No comments:

Post a Comment