Tuesday, April 6, 2010

பௌர்னமி நிலவு

அந்தரத்தில் ஆடும்
நூலில்லா
பெரிய காற்றுப்பை
பௌர்னமி நிலவு.

செங்கதிரவன்
வான்மகளுக்கு
அளித்த
முத்து
பௌர்னமி நிலவு.

பகலை வெள்ளை
அடித்தபோது
இரவின் மேல்
சிந்திய
ஒரு மொட்டு
பௌர்னமி நிலவு.

சுட்டெரிக்கும்
பகலுக்கு
குளிர் இரவின்
சமாதான புறா
பௌர்னமி நிலவு.

No comments:

Post a Comment