மேகமில்லா நிலா
அவள் கண்கள்
இடியில்லா மின்னல்
அவள் புன்சிரிப்பு
செடியில்லா மலர்
அவள் ஸ்பரிசம்
நெருப்பில்லா வெப்பம்
அவள் அரவணைப்பு
பஞ்சில்லா மென்மை
அவள் பாதம்
நீரில்லா ஈரப்பதம்
அவள் முத்தம்
இணையில்லா காவியம்
அவள் ஓவியம்
ஈடில்லா கவிதை
அவள்தான்
என் தாய்.
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment