Wednesday, May 26, 2010

மறையட்டும் தீவிரவாதம்


செந்நிற முகில்
பொன்னிற கதிர்
தன்னிற கடல்
கண்ணிற படகு
கவிநிற காலை
கடற்கரை ஓரம்

குறுக்கும் நெடுக்கும்
குருவிகளின் கூட்டம்
குறுகாமல் மலரும்
மொட்டுகளின் தரிசனம்
பாசமும் நேசமும்
கலந்த தாய்மை
பாசாங்கில்லாத
உயிர் ஓவியம்

வடியும் அன்பு
படியும் மனது
மடியட்டும் மதம்
மறையட்டும் தீவிரவாதம்
விடியட்டும் உலகு

No comments:

Post a Comment