இனிமையில்ல புன்னகை
இறுகிய வயிறு
கறையில்ல உள்ளம்
கரை படிந்த மேனி
கலையா வறுமை
களைத்த கண்கள்
படியா கேசம்
படிந்த தேகம்
விடியா கனவு
விடிந்த வானம்
முடியா வேலை
முடிந்தது வாழ்கை
என நினைகையில்
புதிதாய்
பிறந்தது வானம்
உதிரா கனவு
உதிர்ந்தது வேலை
உணர்த்தா தென்றல்
உணர்த்தியது கல்வி
கலையா சீருடை
கலைத்தது வியர்வை
மலரா கனவு
மலர்ந்தது நிஜமாய்
நாங்களும் பள்ளி
செல்கின்றோம்
இனிப்பான புன்னகையால்
இயற்கை வணங்குகின்றோம்.
Tuesday, May 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment