Tuesday, May 18, 2010

மலர்ந்தது நிஜமாய்

இனிமையில்ல புன்னகை
இறுகிய வயிறு
கறையில்ல உள்ளம்
கரை படிந்த மேனி
கலையா வறுமை
களைத்த கண்கள்
படியா கேசம்
படிந்த தேகம்
விடியா கனவு
விடிந்த வானம்
முடியா வேலை
முடிந்தது வாழ்கை
என நினைகையில்
புதிதாய்
பிறந்தது வானம்
உதிரா கனவு
உதிர்ந்தது வேலை
உணர்த்தா தென்றல்
உணர்த்தியது கல்வி
கலையா சீருடை
கலைத்தது வியர்வை
மலரா கனவு
மலர்ந்தது நிஜமாய்
நாங்களும் பள்ளி
செல்கின்றோம்
இனிப்பான புன்னகையால்
இயற்கை வணங்குகின்றோம்.

No comments:

Post a Comment