Wednesday, May 26, 2010

மறையட்டும் தீவிரவாதம்


செந்நிற முகில்
பொன்னிற கதிர்
தன்னிற கடல்
கண்ணிற படகு
கவிநிற காலை
கடற்கரை ஓரம்

குறுக்கும் நெடுக்கும்
குருவிகளின் கூட்டம்
குறுகாமல் மலரும்
மொட்டுகளின் தரிசனம்
பாசமும் நேசமும்
கலந்த தாய்மை
பாசாங்கில்லாத
உயிர் ஓவியம்

வடியும் அன்பு
படியும் மனது
மடியட்டும் மதம்
மறையட்டும் தீவிரவாதம்
விடியட்டும் உலகு

Saturday, May 22, 2010

MCA Friend Saravanan's Father Demise

மொட்டுக்களாய்
திரிந்த நம்மை
மனம் வீசும்
பூக்களாய்
மாற்றுவது
நம் பெற்றோர்தான்
இன்று நாம்
மகரந்த பூக்களாய்
மாறிவிட்டோம்
நம் முன்னேற்றத்தை
கண்டு மகிழ
தந்தையே
நீ இப்புவியில்
இல்லையே
என எண்ணுகையில்
நெஞ்சம் உடைகிறதே
நிலை சிதறுகிறதே
ஏ கடவுளே
உனக்கு எம்மேல்
என்ன கோபம்
எந்தையை
என் உம்முடன்
எடுத்து
சென்றாய்
பதில் சொல்.

I Love u Dad.

Tuesday, May 18, 2010

மலர்ந்தது நிஜமாய்

இனிமையில்ல புன்னகை
இறுகிய வயிறு
கறையில்ல உள்ளம்
கரை படிந்த மேனி
கலையா வறுமை
களைத்த கண்கள்
படியா கேசம்
படிந்த தேகம்
விடியா கனவு
விடிந்த வானம்
முடியா வேலை
முடிந்தது வாழ்கை
என நினைகையில்
புதிதாய்
பிறந்தது வானம்
உதிரா கனவு
உதிர்ந்தது வேலை
உணர்த்தா தென்றல்
உணர்த்தியது கல்வி
கலையா சீருடை
கலைத்தது வியர்வை
மலரா கனவு
மலர்ந்தது நிஜமாய்
நாங்களும் பள்ளி
செல்கின்றோம்
இனிப்பான புன்னகையால்
இயற்கை வணங்குகின்றோம்.

Monday, May 17, 2010

நெருப்பில் குளிர்காய்ந்து
வானவில்லை கயிறாக்கி
மணலை சக்கரையாகி
இயல்பை பொய்யாக்கும்
காதலை விட
இயல்பை இயல்பாகவே
ரசிக்கும்
நட்பு.

Saturday, May 8, 2010

கருநிற தென்னை கீற்றுக்கள் - தலைமுடி
அந்தி வானம் - நின் நெற்றி
கூந்தலின் குட்டி குழந்தைகள் - புருவங்கள்
எழில் மின்னும் நிலாக்கள் - கண்
பாய்மர கப்பல் காதலர்கள் - நாசி
பிறந்த செம்மேனி கனிகள் - இதழ்கள்
முலாம்பூசா தங்க கிண்ணங்கள் - கன்னங்கள்
இருபுறமும் வளைவழி பள்ளத்தாக்குகள் - செவிகள்
இவ்வாறாய் நின் முகம்

பனிக்கால மேகங்களாய் நின் மனது
வாழைதண்டு குளிர் ஊற்றுக்களாய் நின் உணர்சிகள்
கோடைகால குழாய் தண்ணீராய் உன் தாய்மை
கார்முகில் சிசுவான மலையருவியாய் உன் நேசம்
வியக்கிறேன் தோழா.

Thursday, May 6, 2010

நட்பின் அத்தாட்சி

நினைக்கவில்லை
நெஞ்சம்
நெகுழும் என்று
நினைக்கவில்லை
நட்பின் பொருள்
நீயென்று
நினைக்கவில்லை
நான் உன் நேசத்தின்
பிள்ளையென்று.

மிக்க நன்றி
நண்பனே

என் நட்பின்
அத்தாட்சி
நீ.